ஞாயிறு, 18 அக்டோபர், 2009

சீனியர்ஸை மதிப்போம் ஜூனியர்ஸை மிதிக்காமல் இருப்போம்



முஸ்லிம்களின் எதிரிகள முஸ்லிம்களைத் துன்புறுத்துவது மலையேறி முஸ்லிம்களே முஸ்லிம்களைத் துன்புறுத்தும் கொடுமை "பகிடிவதை" என்ற பெயரில் கல்வி கற்கச் செல்லும் இடங்களில் நடந்தேறுகிறது. அன்று அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற கல் நெஞ்சம் படைத்தவர்கள் ஆரம்ப கால முஸ்லிம்களுக்கு செய்த கொடுமைகளை மறக்க முடியாது.

பிலால் (ரழி) அவர்கள் சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் பாலைவன சுடுமணலில் கிடத்தி நெஞ்சின் மீது பாறாங்கல்லைத் தூக்கி வைத்து வேதனை செய்யப்பட்டார்கள்.


இஸ்லாத்திற்காக உயிர் நீத்த முதல் பெண்மணியான சுமையா (ரழி) அவர்களை அபூ ஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான்.

நெஞ்சை உறுக வைக்கும் இப்படியான வரலாறு இன்று வரை தொடர்கிறது. வேதனைக்குரிய விடயம் என்னவெனில் கல்வி கற்கச் சென்ற எமது முஸ்லிம் சகோதரர்களில் சிலர் ஜூனியர்ஸ் வந்தவுடன் அபூ ஜஹ்ல்களாகஇ உத்பாக்களாகஇ உமையாக்களாகஇ ஷைபாக்களாக உரு மாறுகின்றனர்.

இவர்கள் ஏழு வானங்களுக்கு மேலாலிருந்து நம்மை அவதானித்துக் கொண்டிருக்கும் நம்மைப்படைத்த அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும். நன்மையையும் தீமையையும் பதிய வலப்புறமாகவும் இடப்புறமாகவும் நியமிக்கப்பட்டுள்ள மலக்குமார்களை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். சிறியதையோ பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்யப்பட்ட பதிவேடு வழங்கப்பட இருக்கும் மறுமை நாளையும் மறந்து விடக்கூடாது.

நாளை மறுமை நாளில் சுவர்க்கத்தை விட்டும் தூரமாகி நரகில் நுழைவிக்கப்பட இப்"பகிடிவதை" காரணமாக அமைந்து விடக்கூடாது. அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.


நான் கீழே குறிப்பிடும் அல்குர்ஆன் வசனமும் அல்ஹதீஸ{ம் பகிடிவதை செய்கின்ற முஸ்லிம் சகோதரர்களை விழித்துச் சொல்லப்பட்டது போன்று அமைந்துள்ளது.


அல்லாஹ் கூறுகின்றான்:

"நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாதததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூரையும் தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர"; (33:58)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"எவரது நாவு, கையின் தொல்லையிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார்" (புகாரி – 10, முஸ்லிம் - 65)

அல்லாஹுத்தஆலா பகிடிவதையை அவதூறு என்றும் தெளிவான பாவம் என்றும் வர்ணிக்கிறான். அதே போன்று நாவு, கை இவ்விரு உறுப்புக்களாலும் தான் பகிடிவதை அதிகம் நடக்கிறது.

எனவே, யார் உண்மையான முஸ்லிம் என்பதனைத் தீர்மானிக்கும் செயலாகவும் பகிடிவதை அமைகிறது.
அதாவது யார் பகிடிவதையை மேற்கொள்ளாமல் இருக்கிறாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார் என்ற கருத்தை மேற்படி ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

ஜூனியர்ஸ் உடன் அன்பாகப் பேசி பெயர் ஊர்களைக் கேட்டு அறிமுகமாகிக் கொள்வது பகிடிவதை அல்ல. ஏசுவது, அடிப்பது, மனம் நோவிப்பது போன்றவை தான் பகிடிவதை.


எனவே, அல்லாஹ் வர்ணிக்கும் இக்கொடிய பாவத்தைத் தவிர்த்து உண்மை முஸ்லிம் என்ற பெயரைத் தக்க வைத்துக் கொண்டு இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக