ஞாயிறு, 25 அக்டோபர், 2009

9 மாத பாலகனின் தோலில் புனித அல் குர்ஆன் வசனங்கள்.



வாரத்திற்கு இரு தடவைகள் தோன்றும் அதிசயம்.


தோலில் குர்ஆன் வசனத்துடன் அபூர்வ குழந்தையொன்று பிறந்த சம்பவம் ரஷ்யாவில் இடம் பெற்றுள்ளது. இந்த சிறுவனின் உடலில் குர்ஈன் வசனங்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை புரியாமல் மருத்துவ உலகே திகைப்படைந்துள்ளது.

தென் ரஷ்யாவில் செச்னியாவிலுள்ள தகெஸ்டான் மாகாணத்தைச் சேர்ந்த அலி யகுபோவ் என்ற மேற்படி குழந்தை பிறந்த பின் அதன் நாடியில் “அல்லாஹ்” என்ற வார்த்தை தோன்றியதையடுத்து அவனது பெற்றோர் வியப்படைந்தனர்.

தொடர்ந்து அச்சிறுவனது முதுகு. கரங்கள், கால்கள் மற்றும் வயிற்றில் அரபிய வசனங்கள் பல தோன்ற ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. தற்போது 9 மாத வயதாகும் அலி யகுபோவின் தோலில் வாரத்திற்கு இரு தடவைகள் புனித குர்ஆன் வசனங்கள் தோன்றுவதாகவும் புதிய வசனங்கள் தோன்றும் போது பழைய வசனங்கள் மறைந்து விடுவதாகவும் அவனது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.


“திங்கட்கிழமையிலும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவுகளிலும் சிறுவனது உடலில் குர்ஆன் வசனங்கள் தோன்றி வருவதாக கூறிய மதினா, இதன் போது சிறுவனின் வெப்பநிலை அதிகரித்து அவன் மிகுந்த வேதனையுடன் அழுவதாகக் கூறினார்.

“இதன் போது எமது மகனை பற்றிப்பிடிக்க முடியாது. அவனது உடல் உதறிக் கொண்டிருப்பதால் அவனைத் தொட்டிலிலிலேயே படுக்க வைத்திருப்போம்.அவன் வேதனைப்படுவதைப் பார்க்க கஷ்டமாக இருக்கும” என அவர் மேலும் தெரிவித்தார்.

அலி யகுபோவின் உடலில் குர்ஆன் வசனங்கள் தோன்றும் வரை மத நம்பிக்கையற்றவராக இருந்த அவனது தந்தை, அஹமட் பாஷா அமிராலேவ் விபரிக்கையில், “இந்த சிறுவன் இறைவனின் தூய அடையாளமொன்றாக உள்ளான். எமது பிரதேசத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலையை நிறுத்தும் முகமாக அல்லாஹ்வே இப்பாலகனை எம்மிடம் அனுப்பி வைத்துள்ளான்” என்று கூறினார்.







வீடியோ பார்க்க http://www.youtube.com/watch?v=Yu5-2l0fz6k
மேலதிக தகவல்களுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக