திங்கள், 17 ஆகஸ்ட், 2009

முஸ்லிம்களாகிய நாம் யார்?





ல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவ மாணவிகளாகிய நாம் நமது மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தெரியாததை தெரிந்து கொள்வதும் தெரிந்தவற்றை ஞாபகப்படுத்திக் கொள்வதும் நமது ஈமான் (விசுவாசம்) உறுதி பெற வழி வகுக்கும்.

முஸ்லிம்களாகிய நாம் ஆறு விடயங்களை ஈமான் (விசுவாசம்) கொண்டிருக்கிறோம்.



 வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நபியாயினும், மலக்காயினும் அல்லாஹ்வுடைய பண்புகளில் எதிலும் ஒப்பாக முடியாது. அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு, நல்ல நாமங்கள் உண்டு, பண்புகள் உண்டு ஆனால் அவன் யாருக்கும் ஒப்பானவன் அல்ல. அவனுக்கு நிகராக எதுவும் கிடையாது. அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கின்றான். ஒவ்வொரு இரவும் முதல் வானத்தில் அவனுக்கே உரிய முறையில் இறங்குகின்றான். அல்லாஹ்வை இவ்வுலகில் காணமுடியாது. முஃமின்கள் மாத்திரம் நாளை மறுமையில்; சந்திரனைக் காண்பது போல் அல்லாஹ்வை காண்பார்கள். இவ்வாறு அல்குர்ஆனும், அஸ்ஸ{ன்னாவும் அல்லாஹ்வைப் பற்றிச் சொன்னவற்றை உள்ளபடி ஏற்றுள்ளோம்.



 முஹம்மது நபி ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் இறுதித்தூதராவார்கள். அவருக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் வந்துள்ளார்கள், முஹம்மது நபி ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம் அவர்களுக்குப் பின்னர் நபிமார்கள் வரமாட்டார்கள். அவர்களோடு மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது. இறைத்தூதர்கள் அனைவரும் மனிதரே, ஆனால் மஃஸ{ம்கள், ஈஸா அலைஹிஸ்ஸலாத்தைத் தவிர அனைவரும் மரணித்துவிட்டார்கள். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறுதி நாளின் அடையாளமாக இறங்கிவருவார்கள். பின்னர் நல்லாட்சி செய்து இவ்வுலகில் மரணிப்பார்கள். அவர்கள் தந்தையின்றி இறைவனின் அருளால் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பிறந்த நபி, அவர் இறைவனின் மகனல்ல, அவனது தூதர், இறைவனிற்கு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மகனென்று கிறிஸ்த்தவர்கள் கூறியதாலேயே காபிர்களானார்கள்.



 மலக்குமார்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வஹீ கொண்டுவருபவர். பல்லுருவம் எடுக்கக்கூடியவர.;



 அல்குர்ஆன் இறுதி வேதம், அதுவே உலகப் பொதுமறை, இதற்கு முன்னரும் பல தூதர்களுக்கு பல வேதங்கள் கொடுக்கப்பட்டன, தவ்றாத், ஸபூர், இன்ஜீல் என பல வேதங்கள் வழங்கப்பட்டன. அதில் தவ்றாத்தும், இன்ஜீலும் இன்று வரை இருந்தாலும் அதில் திரிபுகள், சேர்க்கைகள், தணிக்கைகள் பல நிகழ்ந்துள்ளன என வேதங்கள் பற்றி அல்குர்ஆனும், அஸ்ஸ{ன்னாவும் எதையெல்லாம் சொல்கிறதோ அவையனைத்தையும் நம்புகின்றோம்.



 மறுமை நாள் ஈமானின் அடிப்படை, மறுமை மரணத்தின் பின் இறைவன் தீர்ப்பளித்து கூலி தரும் நாள் அந்நாளில் இணைவைத்தவர்களை அல்லாஹ் மன்னிக்கவேமாட்டான், மற்ற பாவங்களை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான் மறுமை பற்றிய அனைத்துச் செய்திகளையும் எந்த வலிந்துரையுமின்றி அல்குர்ஆனும், அஸ்ஸ{ன்னாவும் சொன்னபடி ஏற்றுள்ளோம்.



 கத்ர் (விதி) என்பது இறைவன் ஒன்றை தீர்மானித்தல், எழுதுதல், நாடுதல், படைத்தல் அனைத்தையும் குறிக்கும். இறைவனது விதிப்படியே அனைத்தும் நடக்கும், அவன் நாடாதவைகள் நடக்காது, அவனது நாட்டமின்றி சொர்க்கம் போகவோ, நரகம் போகவோ முடியாது. மனிதனுக்கு தன்னைத் தீர்மானிக்கும் சுதந்திரத்துடனேயே படைக்கப்பட்டுள்ளான். கத்ருடைய முழுமையான விளக்கத்தை அல்லாஹ் மாத்திரமே அறிந்தவன் என கத்ர் பற்றிய அனைத்து ஆதாரபூர்வமான செய்திகளையும் ஏற்றுள்ளோம்.



மேற்சொன்ன எல்லாவற்றையும் ஏற்பவர் இறை விசுவாசியாக முஸ்லிமாக கருதப்படுவார். ஒன்றையேனும் மறுத்த்தவர் இறை நிராகரிப்பாளராக கருதப்படுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக